Monday, November 29, 2010

அவள்

அவள் 


அவள் கல் என்றால்
அவளுள் சிலையாவேன்!!!..
அவள் மண் என்றால் 
அவளுள் புதைந்து விடுவேன்!!!....   
********************
அவள் 
என் இதயப் பெருங்கடலில்
நீர் குமிழியாக - மாறி 
கரைந்து விடுவாள் 
என்றிருந்தேன் !!
அவளோ 
நீராவியாக - மாறி 
மறைந்து விட்டாள்!!!!!.......

****************************
அவளின் 
மெளன கீதமே 
என்னை கவிதை 
எழுதவைத்தது..........
************************************** 
அவளை 
கான பறவையாக 
பறந்து வந்தேன் 
அவளோ 
தன் இதய கூண்டில்
தன்னை
அடைத்துவிட்டாள்.....!!!

No comments: